என் பள்ளி பருவ ஞாபகம் ஞாபங்கள் எல்லாம் ஞாபகங்கள்.... பச்சைகுதிரையும், பம்பரமும் நெல்லுச்சோறும்,நொண்டியும் என் ஞாபங்கள்.... அரையனா இருந்தாலே அரண்மணையை விலைக்கு வாங்குதல் போன்ற என் எண்ணம் ஞாபங்கள்... உப்புச்சத்தும்,சக்கரைநோயும் அறியாமல் நண்பனோடு காக்கா கடி கடித்து தின்ற தின்பண்டங்கள் என் ஞாபங்கள்... பொங்கல்,தீபாவளிக்கு புத்தாடை அணிய காத்திருந்து காத்திருந்து கடைசியில் கிழிந்த உடையை அணிந்து சென்ற பள்ளி நாட்கள் என் ஞாபங்கள்.... தெய்வீக யாத்திரையை விட என் பள்ளி யாத்திரை அதிகம் -என்ற என் ஞாபங்கள்.... மஞ்சள் பையும் மண்பானை நீரும் என் ஞாபங்கள்... கடைசியில் என் உண்மையை ஞாபகம் ஒரு வேலை சோற்றிக்காக பள்ளிக்கு அனுப்பபட்ட பரதேசி நான்....என்ற என் ஞாபங்கள்....
இடுகைகள்
ஜனவரி, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
இயற்கை சொன்ன அவலம் ஏடு எடுத்தேன் கவி ஒன்று வரைந்திட என்னை எழுதென்று சொன்னது இயற்கை... அடர்ந்து உயர்ந்த மரங்கள் இருந்த சோலை-இன்று அகலமான சாலையான அவலத்தை எழுதென்று சொன்னது இயற்கை... காவிரி வைகை போன்று கரைபுரண்டு ஓடிய நதிகளில்-இன்று கழிவு நீர் கலக்கும் அவலத்தை எழுதென்று சொன்னது இயற்கை... காடுகளிலும் சோலைகளிலும் தவழ்ந்து வந்த கார்முகில் தென்றல்-இன்று மூச்சு அடைத்து போன அவலத்தை எழுதென்று சொன்னது இயற்கை .. பொன் விளையும் விளை நிலங்கள்யாவும் - இன்று கட்டிடம் கட்ட பொன் விலைக்கு விற்கப்படும் அவலத்தை எழுதென்று சொன்னது இயற்கை... ஊருக்கே நீர் கொடுத்த ஊரணிகள் -இன்று ஊனமுற்று இருக்கும் அவலத்தை எழுதென்று சொன்னது இயற்கை .... ஏடு எடுத்தேன் கவி ஒன்று வரைந்திட என்னை எழுதென்று சொல்லது யார்??