இயற்கை சொன்ன அவலம் ஏடு எடுத்தேன் கவி ஒன்று வரைந்திட என்னை எழுதென்று சொன்னது இயற்கை... அடர்ந்து உயர்ந்த மரங்கள் இருந்த சோலை-இன்று அகலமான சாலையான அவலத்தை எழுதென்று சொன்னது இயற்கை... காவிரி வைகை போன்று கரைபுரண்டு ஓடிய நதிகளில்-இன்று கழிவு நீர் கலக்கும் அவலத்தை எழுதென்று சொன்னது இயற்கை... காடுகளிலும் சோலைகளிலும் தவழ்ந்து வந்த கார்முகில் தென்றல்-இன்று மூச்சு அடைத்து போன அவலத்தை எழுதென்று சொன்னது இயற்கை .. பொன் விளையும் விளை நிலங்கள்யாவும் - இன்று கட்டிடம் கட்ட பொன் விலைக்கு விற்கப்படும் அவலத்தை எழுதென்று சொன்னது இயற்கை... ஊருக்கே நீர் கொடுத்த ஊரணிகள் -இன்று ஊனமுற்று இருக்கும் அவலத்தை எழுதென்று சொன்னது இயற்கை .... ஏடு எடுத்தேன் கவி ஒன்று வரைந்திட என்னை எழுதென்று சொல்லது யார்??
இடுகைகள்
ஜனவரி 8, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது