இயற்கை சொன்ன அவலம் 



ஏடு எடுத்தேன் கவி ஒன்று வரைந்திட 
என்னை எழுதென்று சொன்னது இயற்கை...

அடர்ந்து உயர்ந்த 
மரங்கள் இருந்த சோலை-இன்று 
அகலமான சாலையான அவலத்தை 
எழுதென்று சொன்னது இயற்கை...

காவிரி வைகை போன்று 
கரைபுரண்டு ஓடிய நதிகளில்-இன்று
கழிவு நீர் கலக்கும் அவலத்தை  
 எழுதென்று சொன்னது இயற்கை...

காடுகளிலும் சோலைகளிலும்
தவழ்ந்து வந்த கார்முகில் தென்றல்-இன்று
மூச்சு அடைத்து போன அவலத்தை
எழுதென்று சொன்னது இயற்கை ..

பொன் விளையும்
விளை நிலங்கள்யாவும் - இன்று
கட்டிடம் கட்ட பொன்
விலைக்கு விற்கப்படும் அவலத்தை
எழுதென்று சொன்னது இயற்கை...

ஊருக்கே நீர்
கொடுத்த ஊரணிகள் -இன்று
ஊனமுற்று இருக்கும் அவலத்தை
எழுதென்று சொன்னது இயற்கை ....

ஏடு எடுத்தேன் கவி ஒன்று வரைந்திட
என்னை எழுதென்று சொல்லது யார்??





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்