அன்பு தங்கை:

அன்பின் கோயிலடி நீ -எனக்கு 
ஆறுதல் கூற வந்த 
அன்னையடி நீ

அண்ணா என்று நீ அழைக்கும் போது 
என் அன்னையின் சாயல் தெரியுதடி ..

உறவுக்கு உறவாய் நீ இருக்கின்றாய்
என் உணர்வோடு நீ கலந்திருக்கின்றாய்...

எது கேட்டாலும் நீண்ட நேரம் யோசிப்பாய்- இறுதியில் 
தெரியவில்லை அண்ணா என்று 
மீண்டும் என்னையே யாசிப்பாய்...

 கருவரை உறவாய் இல்லை என்றாலும் 
நாம் இனி கல்லறை வரை 
உறவாய் இருப்போம் ...

என் உயிராய் என் 
உடன் பிறவா தங்கையே......

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்