என் வாழ்வின் இன்பமான தருணத்தில் என்னுடைய இன்பத்தினை பகிர்ந்து கொள்ள இனிய நண்பர்கள் எனக்கு இல்லை.. துன்பமான தருணத்தில் என் துன்பம் போக்க நல்ல துணையவள் எனக்கு இல்லை... மகிழ்ச்சியின் ஊற்றான நல் மழலை செல்வங்கள் எனக்கு இல்லை..... என் சோகத்தினை சொல்லி அழ நல்ல சொந்தங்கள் எனக்கு இல்லை... ஆதலால் என் வீட்டில் இருந்து தூரமாகவும் இந்த நாட்டிற்கு பாரமாகவும் அங்கும் இங்கும் அழைகின்றேன் .... அழைகின்றேன்..... (ஒரு) அனாதையாக....
வாருங்கள் மக்களே வாருங்கள் வாங்களிப்போம்!!! உங்களுக்காக ஓர் விழா ஐந்தாண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இலவச திருவிழா!!! எட்டி உதைக்கப்பட்ட ஏழை மக்களையெல்லாம் கட்டி பிடித்து பல கட்டு பணம் கொடுக்கும் பெரு விழா!!! இவர்கள் அள்ளிதெளிக்கும் வாக்குறுதிகள் அனைத்தும் கானல் நீர் இதை நம்பி தாகம் வளர்க்காதீர்கள்... இவர்கள் பேச்சுகள் அனைத்தும் கள்ள சிரிப்பும் கபட நாடகமும் தான்... இவர்களால் ஒரு நாள் சமத்துவம் விடியலாகும் பத்தானை அணைத்த உடன் மீண்டும் பற்றி எரியும்.... வாருங்கள் மக்களே வாருங்கள் வாக்களிப்போம் உங்கள் ஒரு ஓட்டிற்கு நாட்டை நல்வழிப்படுத்தும் சக்தி உண்டு-இதை எண்ணி பார்த்திடுவீர் எனது அன்புக்குரியோரே!!! வாருங்கள் மக்களே வாருங்கள் வாக்களிப்போம் யாருக்கு வாக்களிக்க சாதி மதம் பார்க்காதவரா இனம் மொழி பற்றி பேசாதவரா அனைவருக்கும் சமமானவரா சமுக அக்கறை உள்ளவரா சமத்துவத்தை நிலைநாட்டுபவரா-என எண்ணி பார்த்து போடு...
அன்று ஒரு நாள் இரவில் வலசை- இந்த பிரளயம் எங்கும் இருளின் பிம்பங்கள் சற்று தூரத்து மலைமேல் அடர்ந்த கொடிய சூரிய பிழம்புகள் ஆறறிவு ஜீவிகளின் அறிவற்ற செயலில் அழிந்தன உயிரினங்கள் ............ காட்டுத் தீ