நான் யார்....




என் வாழ்வின்
இன்பமான தருணத்தில் என்னுடைய இன்பத்தினை பகிர்ந்து கொள்ள இனிய நண்பர்கள் எனக்கு இல்லை..

துன்பமான தருணத்தில் என் துன்பம் போக்க நல்ல துணையவள் எனக்கு இல்லை...

மகிழ்ச்சியின் ஊற்றான நல் மழலை செல்வங்கள்  எனக்கு இல்லை.....

என் சோகத்தினை சொல்லி அழ நல்ல சொந்தங்கள் எனக்கு இல்லை...  ஆதலால்

என் வீட்டில் இருந்து தூரமாகவும் 
இந்த நாட்டிற்கு 
பாரமாகவும் 

அங்கும் இங்கும்
அழைகின்றேன் ....
அழைகின்றேன்.....

(ஒரு) அனாதையாக.... 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்