திருக்குறள் -கவிதை
குறள்:
"அணங்கு கொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர் கொல் மாலும் என் நெஞ்சே" 1081
கவிதை:
நேற்று சோலையிலே (அ) நகர்புற சாலையிலே
நான் கண்டவள்
வானத்தில் இருந்து வந்த தேவதையோ-இவள்
தேவலோகத்து தெய்வ மகளோ-இவள்
சோலை வனத்தில் அசைந்தாடும் மயிலோ-இவள்
அழகிய ஆபரணங்கள் அணிந்த
அழகிய மானிடப் பொண்னோ!
யார் இவள் என அறியாமல்
அவள் மீது காதல் கொண்டு மயங்குவது
ஏன்.....என் நெஞ்சே...
குறள்:
"உள்ளக் களித்தலும் கன மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற்கு உண்டு "
கவிதை:
நினைத்தால் மயக்கம்
பார்த்தால் கிறக்கும்
காதலுக்கு தான் உண்டு
கள்ளுக்கு இல்லை..
குறள்:
"முகைமொக்குள் உள்ளது நாற்றம் போல் பேதை
நகை மொக்குள் உள்ள தொன்று உண்டு"
கவிதை:
மலரின் மொட்டுக்குள்
நறுமணம் மறைந்திருப்பது போல
இந்த பெண்ணின் புன்னகை மொட்டுக்குள்
மறைந்திருப்பது காதலா...காமமா....
மறைந்திருப்பது காதலா...காமமா....
கருத்துகள்
கருத்துரையிடுக